Artwork

Content provided by Antony Inigo. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Antony Inigo or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.
Player FM - Podcast App
Go offline with the Player FM app!

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 16, எப்படி திருத்தந்தை வேண்டுகிறார்? & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - Sr. Arockia Mary FSAG 43/50

4:45
 
Share
 

Manage episode 313450283 series 3271179
Content provided by Antony Inigo. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Antony Inigo or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 16, எப்படி திருத்தந்தை இறைவனை வேண்டுகிறார்?

என்னைப் பொறுத்தவரை இறைவேண்டல் என்பது நினைவுகளின் இறைவேண்டல் ஆகும். என் வாழ்க்கையில், அல்லது அவரது திரு அவையில், அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கில் கடவுள் செய்தவற்றை முழுவதும் திருப்பிப்பார்த்து வேண்டுவதாகும். இது எனக்கு, புனித இஞ்ஞாசியாரின், முதல் வார ஆன்மீகப் பயிற்சியில், பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்ட இரக்கம் நிறைந்த ஆண்டவரை எதிர்கொள்வதை நினைவூட்டுகிறது. என்னை நான் கேட்டுக்கொள்கிறேன்: “நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்தேன்? நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்துகொண்டிருக்கிறேன்? கிறிஸ்துவுக்காக என்ன செய்யப் வேண்டும்?” இது இறையன்பை அடையக் காட்சி தியானத்தில் நாம் பெற்றுக்கொண்ட கொடைகளை நினைவுகூரச் சொல்லும் போது புனித இஞ்ஞாசியார் குறிப்பிடும் நினைவுகள் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என்னை நினைக்கிறார் என்று எனக்குத் தெரிகிறது. நான் அவரை மறந்தாலும் அவர் என்னை ஒருபோதும் மறப்பதே இல்லை. நினைவு என்பது இஞ்ஞாசியார் ஆன்மிகம் மற்றும் இயேசுசபையினரின் இதயத்திற்கு அடிப்படையான பங்கு கொண்டது; அருள் பற்றிய நினைவு, விவிலியத்தின் இணைச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நினைவு, கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையின் அடிப்படையாக அமையும் கடவுளின் செயல்கள் பற்றிய நினைவு ஆகும். இந்த நினைவே என்னை அவருக்கு மகனாக்குகிறது, மேலும், அதுவே என்னைத் தந்தையாகவும் ஆக்குகிறது. – திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளுக்காக திறக்கப்பட்டுள்ள பெரிய இதயம், அமெரிக்கா

ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள். அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள். அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும், நினைவில் கொள்ளுங்கள். – திருப்பாடல் 105 : 4 – 5

இன்று கொஞ்ச அதிக நேரம் எடுத்து நீங்கள் விரும்பித் திழைக்கும்; நினைவுகளை திருப்பிப் பாருங்கள். அவற்றில் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

-------------------- --------------------- -----------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 43/50.

பணி. தனராசு சேச.

உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய பின் பேதுருவைத் தனியே தம்மிடம் அழைக்கிறார். பேதுரு தம் தலைவரை அறிந்ததே இல்லை என்று சத்தியம் பண்ணி மறுதலித்ததை எண்ணி எண்ணி மனம் குமுறியபடி இருக்கிறார். முன்பு போல இல்லை. ஒதுங்கி ஒதுங்கிச் செல்கிறார். அவருக்கு ஓர் உளவியல் சிகிச்சை நல்கும் எண்ணத்துடன் அவருக்காக நம் ஆண்டவர் ஒரு நாடகமே நடத்துகிறார்.

சாதாரணமாக நம் ஆண்டவர் பேதுருவைச் சீமோனே என்றுதான் அழைப்பார். இப்போது வம்படியாக ~~யோவானின் மகன் சீமோனே|| என்று அழைத்து, ~~நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?|| என்று கேட்டார். இவ்வாறு மும்முறை கேட்டார். மறுதலித்ததைச் சுட்டிக் காட்டாமல் பேதுருவே தம்மிடம் மற்ற அனைவரையும் காட்டிலும் பேரன்பு செலுத்துகிறவர் என்று அழுத்தம் திருத்தமாக உணர்த்துவதற்காக அப்படிக் கேட்டார். பின்னர் ~~என் ஆட்டுக் குட்டிகளைப் பேணி வளர்||, ~~என் ஆடுகளை மேய்||, ~~என் ஆடுகளைப் பேணி வளர்|| என்று அவரிடம் முந்தையப் பொறுப்புகளை மீண்டும் ஒப்படைத்தார்.

அத்துடன் நிறுத்தாமல் அவர் எதிர் காலத்தில் எப்படி தம் தலைவருக்காக உயிர்த் தியாகம் புரிவார் என்பதையும் எடுத்துச் சொல்லி அவரைத் தேற்றி முன்பு போலத் துடிப்பு உள்ளவராக மாற்றினார்.

நம் ஆண்டவர் நம் குறைகளை மறந்து, நிறைகளையே மனத்தில் நிறுத்தி வைப்பவர் என்பது தெளிவன்றோ?

--------- --------------- -------------

இன்றைய 16.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

  continue reading

193 episodes

Artwork
iconShare
 
Manage episode 313450283 series 3271179
Content provided by Antony Inigo. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Antony Inigo or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 16, எப்படி திருத்தந்தை இறைவனை வேண்டுகிறார்?

என்னைப் பொறுத்தவரை இறைவேண்டல் என்பது நினைவுகளின் இறைவேண்டல் ஆகும். என் வாழ்க்கையில், அல்லது அவரது திரு அவையில், அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கில் கடவுள் செய்தவற்றை முழுவதும் திருப்பிப்பார்த்து வேண்டுவதாகும். இது எனக்கு, புனித இஞ்ஞாசியாரின், முதல் வார ஆன்மீகப் பயிற்சியில், பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்ட இரக்கம் நிறைந்த ஆண்டவரை எதிர்கொள்வதை நினைவூட்டுகிறது. என்னை நான் கேட்டுக்கொள்கிறேன்: “நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்தேன்? நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்துகொண்டிருக்கிறேன்? கிறிஸ்துவுக்காக என்ன செய்யப் வேண்டும்?” இது இறையன்பை அடையக் காட்சி தியானத்தில் நாம் பெற்றுக்கொண்ட கொடைகளை நினைவுகூரச் சொல்லும் போது புனித இஞ்ஞாசியார் குறிப்பிடும் நினைவுகள் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என்னை நினைக்கிறார் என்று எனக்குத் தெரிகிறது. நான் அவரை மறந்தாலும் அவர் என்னை ஒருபோதும் மறப்பதே இல்லை. நினைவு என்பது இஞ்ஞாசியார் ஆன்மிகம் மற்றும் இயேசுசபையினரின் இதயத்திற்கு அடிப்படையான பங்கு கொண்டது; அருள் பற்றிய நினைவு, விவிலியத்தின் இணைச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நினைவு, கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையின் அடிப்படையாக அமையும் கடவுளின் செயல்கள் பற்றிய நினைவு ஆகும். இந்த நினைவே என்னை அவருக்கு மகனாக்குகிறது, மேலும், அதுவே என்னைத் தந்தையாகவும் ஆக்குகிறது. – திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளுக்காக திறக்கப்பட்டுள்ள பெரிய இதயம், அமெரிக்கா

ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள். அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள். அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும், நினைவில் கொள்ளுங்கள். – திருப்பாடல் 105 : 4 – 5

இன்று கொஞ்ச அதிக நேரம் எடுத்து நீங்கள் விரும்பித் திழைக்கும்; நினைவுகளை திருப்பிப் பாருங்கள். அவற்றில் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

-------------------- --------------------- -----------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 43/50.

பணி. தனராசு சேச.

உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய பின் பேதுருவைத் தனியே தம்மிடம் அழைக்கிறார். பேதுரு தம் தலைவரை அறிந்ததே இல்லை என்று சத்தியம் பண்ணி மறுதலித்ததை எண்ணி எண்ணி மனம் குமுறியபடி இருக்கிறார். முன்பு போல இல்லை. ஒதுங்கி ஒதுங்கிச் செல்கிறார். அவருக்கு ஓர் உளவியல் சிகிச்சை நல்கும் எண்ணத்துடன் அவருக்காக நம் ஆண்டவர் ஒரு நாடகமே நடத்துகிறார்.

சாதாரணமாக நம் ஆண்டவர் பேதுருவைச் சீமோனே என்றுதான் அழைப்பார். இப்போது வம்படியாக ~~யோவானின் மகன் சீமோனே|| என்று அழைத்து, ~~நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?|| என்று கேட்டார். இவ்வாறு மும்முறை கேட்டார். மறுதலித்ததைச் சுட்டிக் காட்டாமல் பேதுருவே தம்மிடம் மற்ற அனைவரையும் காட்டிலும் பேரன்பு செலுத்துகிறவர் என்று அழுத்தம் திருத்தமாக உணர்த்துவதற்காக அப்படிக் கேட்டார். பின்னர் ~~என் ஆட்டுக் குட்டிகளைப் பேணி வளர்||, ~~என் ஆடுகளை மேய்||, ~~என் ஆடுகளைப் பேணி வளர்|| என்று அவரிடம் முந்தையப் பொறுப்புகளை மீண்டும் ஒப்படைத்தார்.

அத்துடன் நிறுத்தாமல் அவர் எதிர் காலத்தில் எப்படி தம் தலைவருக்காக உயிர்த் தியாகம் புரிவார் என்பதையும் எடுத்துச் சொல்லி அவரைத் தேற்றி முன்பு போலத் துடிப்பு உள்ளவராக மாற்றினார்.

நம் ஆண்டவர் நம் குறைகளை மறந்து, நிறைகளையே மனத்தில் நிறுத்தி வைப்பவர் என்பது தெளிவன்றோ?

--------- --------------- -------------

இன்றைய 16.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

  continue reading

193 episodes

All episodes

×
 
Loading …

Welcome to Player FM!

Player FM is scanning the web for high-quality podcasts for you to enjoy right now. It's the best podcast app and works on Android, iPhone, and the web. Signup to sync subscriptions across devices.

 

Quick Reference Guide