புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 17, வழிகளை இலக்குக்கு ஏற்பப் பொருத்துங்கள் & உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 44/50. பணி. தனராசு சேச.
Manage episode 313450282 series 3271179
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 17, வழிகளை இலக்குக்கு ஏற்பப் பொருத்துங்கள்
ஒவ்வொரு நல்ல தேர்விலும் நம்மைப் பொறுத்த மட்டில், நமது எண்ணம் எளிமையானதாகஇருத்தல் வேண்டும். நம் ஆண்டவராம் கடவுளைப் புகழவும், என் ஆன்மாவை மீட்கவும், படைக்கப்பட்டிருக்pன்றேன் என்ற நோக்கத்தை நான் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, நான் எதை தெரிந்தெடுத்தாலும் அது நான் படைக்கப்பட்டதன் நோக்கத்திற்கு உதவ வேண்டும். குறிக்கோளை சாதனத்திற்கு அடிமைப்படுத்தாமல், சாதனத்தை குறிக்கோளுக்கேற்றபடி சீரமைத்துக்கொள்வேன். பலர் திருமணத்தை முதன்மையாகத் தெரிந்து கொள்கின்றனர்: அது ஒரு சாதனம். கடவுளின் ஊழியமே வாழ்வின் இறுதி நோக்கமாகவும், திருமண (வாழ்க்கை) நிலை அந்நோக்கத்தை அடைய சாதனமாகவும் அமைய வேண்டியிருக்க, பலர் இந்த ஒழுங்தைத் தழைகீழாக்கி, திருமணத்தைக் குறிக்கோளாகவும், கடவுளின் சேவையைச் சாதனமாகவும் தேர்ந்தெடுக்கின்றனர். அதன் பின்னர், அந்த மானியத்தில் கடவுளுக்குப் பணிபுரிய விழைகின்றனர். இத்தகையோர், நேரடியாக இறைவனிடம் செல்வதில்லை. ஆனால் தங்களின் தகாத பற்றுதல்களுக்கு முழுமையாக கடவுள் ஒத்தியங்குமாறு விரும்புகின்றனர். அதன் விளைவாக, அவர்கள் குறிக்கோளைச் சாதனமாகவும், சாதனத்தைக் குறிக்கோளாகவும் மாற்றி விடுகின்றனர். அதன் பயனாக எதை முதன்மையாகத் தேடவேண்டுமோ அதை இறுதியாகத் தேடுகின்றனர்.
ஆகவே எனது முதல் நோக்கம் இறைவனுக்குப் பணிபுரிவதை நாடுவதாய் இருக்கவேண்டும். அதுவே குறிக்கோள். அதற்குப் பின்னரே, எனக்கு நன்மை பயக்குமானால் மானியம் அடைவதையோ, திருமணம் செய்வதையோ தேடிக்கொள்ளலாம்: ஏனெனில் இவைகள் குறிக்கோளுக்குச் சாதனமாக உதவுகின்றன. – ஆன்மீகப்பயிற்சி எண் 169
இது நல்ல முடிவை எடுப்பதற்கான, இஞ்ஞாசியாரின் அடிப்படைத் தத்துவம். முதலில் கடவுளைத் தேடுங்கள். கடவுள் பணி நமது குறிக்கோளாக இருந்தால், நமது தேர்வுகளும் நன்றாக இருக்கும்.
நீங்கள் முக்கியமான முடிவுகளை எதிர்கொள்கிறீர்களா? கடவுளுக்குப் பணி செய்வதே நம் தலைசிறந்த முதன்மையான கருத்தாய் இருக்கவேண்டும் என்று செபியுங்கள்
------- ------------ ------------------ ---------------------
உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 44/50.
பணி. தனராசு சேச.
தாம் தந்தையிடம் இருந்து வந்ததையும் தந்தையிடம் திரும்ப வேண்டியவர் என்பதையும் நம் ஆண்டவர் இயேசு மனத்தில் இருத்தி இருந்தார். ~~தாம் இவ் வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்|| (யோவா 13:1) என்று யோவான் குறிப்பிடுகிறார்.
கடவுள் மனிதனை மையமாக வைத்தே சிந்திக்கிறார் எனத் தெரிகிறது. மனிதனுக்காக இந்த உலகத்தைப் படைத்தார். மனிதனை மீட்கத் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இப்போது அந்தத் திரு மகன் விண்ணகம் செல்வது மனிதரை மையமாகக் கொண்டு செயல்படுவதாகத் தெரிவிக்கிறார். ~~நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்|| (யோவா 14:3) என்கிறார். ~~நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்|| (யோவா 16:7) என்பதும் மனிதரின் நன்மையை முன்னிட்டே அல்லவா?
கடவுள் மனிதனை மையமாகக் கொண்டு சிந்திக்கிறார், செயல் புரிகிறார். அப்படியானால் நன்றியுள்ள மனிதரும் கடவுளை மையமாகக் கொண்டல்லவா சிந்திக்க வேண்டும்? செயலாற்ற வேண்டும்?
மேலும் கடவுளே மனிதனை மையமாகக் கொண்டு செயலாற்றும்போது, மனிதன் மனிதனுக்கே கேடு செய்கிற கயவனாக வாழ்வதை என்ன என்று சொல்லலாம்?
--------- --------------- -------------
இன்றைய 17.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-
புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -
Four platforms:
https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==
https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll
193 episodes